districts

கார்ப்ரேட் நிறுவனங்களின் விசுவாசியாக புதுவை கூட்டணி அரசு : சிபிஎம் சாடல்

புதுச்சேரி, ஜன.22- ப்ரீ பெய்டு மின் மீட்டர் முறையை கொண்டு வருவதின் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் விசுவாசியாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மாறியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: புதுச்சேரி அரசு மின்துறையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விலை  பேசி விற்பதிலேயே குறியாக உள்ளது.  அதன் ஒரு பகுதியாகத் தான் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமைச்சர் நமச் சிவாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மின் கட்டண பிரீ பெய்டு முறைக்கு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  மின்சா ரம் என்பது மக்களின் அத்தியாவசியப் பட்டியலில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்கும் வேலையை தொடர்ந்து முன்னெடுத்து வருவது பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளது. தனியார் வசம் சென்றால் மின் கட்டணம் என்பது பல மடங்கு உயரும் என்பது அனை வருக்கும் தெரிந்தது. அதனை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும்,  மின்சார ஊழியர்களும் தொடர்ந்து  போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ப்ரீ பெய்டு முறை
 இந்நிலையில் தற்போது மின்கட்டண முறையில் ப்ரீ பெய்டு முறை கொண்டு வருவது ஏழை ஏளிய  மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த திட்டத்தின் மூலம் மின்சாரம் என்பது  எட்டாக் கனியாக மாறும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் மக்களை கொள்ளை அடிக்க வழி வகுக்கும்.  பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு ரூ.251.10 கோடி கடன்  கொடுக்குமாம், வரும் டிசம்பர் மாதத் துக்குள் இந்த திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வந்தால் ஒன்றிய  அரசு 15 சதவீத மானியமும், கூடுதலாக  7.5 சதவீத ஊக்கத்தொகையும் வழங்குமாம். மீதித் தொகையை மாதந்தோறும் ஒரு மீட்டருக்கு சுமார் ரூ. 80 வீதம் 90 மாதங்களுக்கு புதுச்சேரி அரசு திருப்பிச் செலுத்து மாம். இது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மக்களை கொள்ளை அடிக்க வழி வகுக்கும் . எனவே தான் என்.ஆர் காங்கி ரஸ், பாஜக கூட்டணி அரசின் நயவஞ்ச கமான செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 
நிலுவை ஊதியம் வழங்க கைவிரிக்கும் அரசு
ரேஷன் கடை ஊழியர்கள், இன்னும்  பிற கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவை ஊதியம் வழங்குவதற்கு பணம் இல்லை என்று கைவிரிக்கும் அரசு, புதிதாக மின் கட்டண ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கு மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் செலவாகும். இந்த செலவிற்கு மட்டும் அரசிடம் பணம் உள்ளதா? மின் கட்டணத்தை மக்கள் முன்  கூட்டியே செலுத்தி தங்களது இல்லங்க ளுக்கு கிடைக்கும் மின்சாரத்தை உத்திரவாதப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இனி  பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் என்ற நிலை உருவாக் கப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கார்ப்ரேட் நிறுவனங்களின் கைபாவையாக உள்ளது. இதை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் போராடுவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.