districts

img

புதுவையில் மீட்பு பணியில் ராணுவம்

புதுச்சேரி,டிச.1- வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல் புய லானது மரக்காணம்- புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. 

இதனையொட்டி, புதுவையில் சனிக்கிழமை மாலை முதல் மின் இணைப்புகள் 12 மணி நேரத்திற்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதிவேக காற்று டன் மழை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விட காற்றின் வேகம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், தொடர் மழையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை வெள்ளத்தால் மூழ்கிய குடியிருப்புகள்

புதுச்சேரியின் வெங்கட்டா நகர்,  பாவாணர் நகர், ரெயின்போ நகர்  தொடங்கி நகரின் பல பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ள  நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே நிவா ரண முகாம்கள் நிரம்பியுள்ள நிலையில், பல குடியிருப்புகளில் தரைத்தளத்தில் இருந்தோர் மேல் தளத்துக்கு தஞ்ம் அடைந்துள்ளனர். களத்தில் ஆட்சி யர், நகராட்சி ஆணையர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து பேரிடர் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிப்மர் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் அரசு ஊழி யர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மழை தொடர்ந்து பெய்வதாலும் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தன்னார்வல ர்கள் முன்வந்து உதவி செய்து உணவு வழங்கி வருகின்றனர். 

மேலும், புதுவையை ஒட்டி யுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடும் மழை பொழிவு உள்ளது. இதனால் வீடுர் அணை, சாத்த னூர் அணை உள்ளிட்ட அணைக் பட்டுகள் நிரம்பியுள்ள நிலையில் அவை திறக்கப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மரப்பாலம், வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களில் தண்ணீர் தேங்கியிருப்பது தான் மின் விநியோகம் தடை பட காரணம் என்று மின் துறையினர் கூறியுள்ளனர். தொடர் மழையால் புதுச்சேரி முழுக்க கடைகள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுக்க வெறிச்சோடி காணப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் முகாம்களாக மாற்றம்

கனமழையால் கடும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதால் மக்கள் தங்க வைக்க அரசு, தனியார்  பள்ளி மற்றும் கல்லூரிகளை முகாம்களாக அரசு அறிவித்துள் ளது. அதை திறக்க நிர்வா கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கனமழையால் கடும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதால் மக்கள் தங்க வைக்க அரசு, தனியார்  பள்ளி மற்றும் கல்லூரிகளை முகாம்களாக அரசு அறிவித்துள் ளது. அதை திறக்க நிர்வா கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முன் எப்போ தும் இல்லாத வகையில் கனமழை  பொழிந்து வருகிறது. நகரே  வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி யுள்ளது. அதை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்ற னர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்க வைக்க முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், “புதுச்சேரியிலுள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை முகாம்களாக அறி விக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக திறந்து வைக்க நிர்வாகத்துக்கு உத்தர விட்டுள்ளோம்” என்றார். இது தொடர்பான உத்தரவு நகல் கல்வித் துறை, உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய நகரம்

கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மழை தொடர்வ தாலும் வெள்ளநீர் வடிவதில் சிரமம் உள்ளது. தொடர் மழையால் புதுச்சேரி முழுக்க கடைகள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுக்க வெறிச்சோடி காணப்படுகிறது.

புதுச்சேரியில் வரலாறு காணாத கடும் மழை பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய ராணு வம் ஈடுபடத் தொடங்கியது. இதை யடுத்து புதுச்சேரி அரசின் கோரிக் கையை ஏற்று சென்னை காரிசன்  பட்டாலியன் இந்திய ராணுவப் படையினர் புதுச்சேரி வந்தனர். மேஜர் அஜய் சங்வான் தலைமை யில் 6 ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவி னர் புதுச்சேரியில் மீட்புப் பணி யில் ஈடுபட்டுள்ள னர். புதுச்சேரி நக ரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடு களில் வெள்ளம் புகுந்துள்ளது சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்ப தால் அப்பகுதியில் தற்போது மீட்புப் பணியை துவக்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவித்தனர்.

துணைநிலை  ஆளுநர் ஆய்வு

புதுச்சேரி கடற்கரை சாலை, வைத்திகுப்பம் கடற்கரை பகுதி, தேங்காய்திட்டு துறைமுகம் .  ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனூர் துணை மின் நிலையம்,  கனகன் ஏரி ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தலைமை கண்காணிப்புபப் பொறியாளர் ஆகியோர் உடனி ருந்தனர்.

4 பேர் பலி

இந்த மழை வெள்ளத்தில் சிக்கி  இதுவரை நான்கு பேர் உயிரிழந் துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.