districts

img

எழுத்தாளர் அண்டனூர் சுராவுக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை, ஜன.30-  சிறுகதை, நாவல் இலக் கியத்திற்காக தொடர்ந்து பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்று வரு பவரும், முற்போக்கு இலக்கி யத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வரு பவருமான எழுத்தாளர் அண்  டனூர் சுராவுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் திங் கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத் துவர் சங்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மருத்து வர் ராமுமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர் மன், மருத்துவர் ராம்தாஸ், மருத்துவர் ஜெயராமன், பேரா.விஸ்வநாதன், ராமா.ராமநாதன் ஆகியோர் முன்  னிலை வகித்தனர். நூலை அறிமுகம் செய்து மைதிலி கஸ்தூரிரங்கன் பேசினார். நூல்குறித்து தங்கம்மூர்த்தி, ஜீவி, ராசி.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். நூலாசிரியர் அண்டனூர் சுரா ஏற்புரை வழங்கினார்.  திசைகள் அமைப்பின் தலை வர் மருத்துவர் தெட்சிணா மூர்த்தி வரவேற்க, பொருளா ளர் முகமது முபாரக் நன்றி கூறினார்.