பொன்னமராவதி, நவ.9- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரு வாய்த் துறை சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை ஆர்டிஓ குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேர ணிக்கு பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பிரகாஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சேகர், காவல் ஆய்வாளர் தன பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளா கத்தில் தொடங்கிய பேரணியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது, மலை யாண்டி கோயில் வழியாக ஊரணியை சுற்றி வந்து பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.