புதுக்கோட்டை, பிப்.18 - இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடமாடும் இரத்த சேகரிப்பு வாக னங்களை அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் வழங்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் இரத்த தானக் கழக மாநில மாநாடு வலி யுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்த தானக் கழக மாநில மாநாடு பிப்.17, 18 தேதிகளில் புதுக் கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். இரத்ததானக் கழக கன்வீனர் எல்.பி.சரவணத்தமி ழன் அறிக்கையை முன்வைத்துப் பேசினர். இரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தும், 10 ஆயிரம் உடல் உறுப்பு தானப் படிவங்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பெற்றுக் கொண்டும் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றினார்.
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பி னர் சு.திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், திரைக் கலைஞர் மதன் தட்சிணாமூர்த்தி, சண்முக பழனியப்பன், எம்.ஜியாவு தின், எஸ்ஆர்எம்.ராஜா ஆகியோர் உரையாற்றினர்.
இரத்த தானத்தின் அவசியம் குறித்தும், குருதிக் கொடையாளர் களைப் பாராட்டியும் வரவேற்புக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். இராமதாஸ், மக்களுக்கான மருத்து வர் சங்க மாநிலச் செயலாளர் காசி, மருத்துவர்கள் ஜி.எட்வின், கேஎச்.சலீம், எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.கார்த்திக் தெய்வநாயகம், கரு ணாகரன், அனுரத்னா, சரவணன் ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் நிறைவுரையாற்றினார். “தமிழ்நாட்டில் தற்போது, இரண்டு நடமாடும் இரத்த சேகரிப்பு பேருந்துகள் மற்றும் 17 இரத்த சேகரிப்பு வேன்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், திருச்சி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளில் இரத்த சேகரிப்பு பேருந்துகளையும், இதர அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கும் நடமாடும் இரத்த சேக ரிப்பு வேன்களை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை சரிசெய்வ தோடு, காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விபத்துகள், பிரசவம், டெங்கு, டைப்பாய்டு நோய்கள் தாக்கும் காலங்களிலும், இயற்கை பேரிடர் காலங்களிலும் உடனடி இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகை யில் இரத்த வங்கிகளின் சேமிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும்.
கிராமங்கள்தோறும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், குக்கிராமங்களில் துணை சுகாதார நிலையங்களையும் அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் வரவேற்க, வர வேற்புக்குழு பொருளாளர் எம்.ஏ.ரகுமான் நன்றி கூறினார்.