புதுக்கோட்டை, டிச.2- இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நூல கர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை புதுக் கோட்டை மாவட்டத்தில் மட்டும் வழங்கப்ப டாமல் இருப்பதைக் கண்டித்து நூலகர்கள் வெள்ளியன்று உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஒருநபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி இரண்டாம் மற்றும் மூன்றாம்நிலை நூலகர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு அனைத்து மாவட்டங் களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நூலகர்களுக்கு மட்டும் இதுநாள்வரை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரிலும், கடிதம் மூலமா கவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உடனடி யாக ஒருநபர் ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய விகிதங்களை உயர்த்தியும், 27.02.2021 தேதி வரையிலான நிலுவைத் தொகை யையும் சேர்த்து வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நூலக அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்தில் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் எஸ்.கண்ணன், மு.சுவாமி நாதன், மா.செந்தில்நாதன் உள்ளிட்ட நூல கர்கள் பங்கேற்றனர்.