districts

கந்துவட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

பொன்னமராவதி, ஜூலை 25 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய 6 ஆவது மாநாடு அண்ணாமலை திருமண மண்டபத்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய தலைவராக கண்ணன், செயலாளராக அழகு, பொருளாளராக  மகாதிர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் அடாவடியான கந்துவட்டி பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பொன்னமராவதி பேரூராட்சியில் அமல்படுத்த வேண்டும். அக்னிபாதை திட்டத்தை கைவிட வேண்டும். அரசின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்   உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டச் செயலாளர் டி.நாராயணன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ன்.பகுருதீன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கே.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;