districts

img

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை/திருச்சிராப்பள்ளி, ஜூன் 3 - தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். அதனை யொட்டி புதுக்கோட்டை பழைய  பேருந்து நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு  வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டி யன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகரா ஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
இதை தொடர்ந்து திருச்சி மத்திய  பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநக ராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகி யோர் பங்கேற்றனர். உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தூய்மை பணியினை தொடங்கி வைத்தனர்.

;