districts

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, அக்.27-  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞருக்கு 3 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து புதுக்  கோட்டை மகளிர் நீதிமன்றம் வியாழ னன்று தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கிள்ளுக்கோட்டை அருகே உல கங்காத்தான்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மாரிமுத்து (34). இவர், 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுவதற்காக கடந்த ஆண்டு தூக்கிச் சென்றுள்ளார்.  அப்போது, சிறுமி சத்தம் போட்ட வுடன் அங்கேயே அவரை விட்டுவிட்டு மாரி முத்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கீர னூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிவு செய்து, மாரி முத்துவை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராதத் தொகை யை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என நீதிபதி ஆர்.சத்யா தீர்ப்பளித்தார்.