பொன்னமராவதி, நவ.23- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி நுழை வாயில் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலை வர் ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மேலைச்சிவ புரி பகுதி பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதி கமாக வரும் இடமாக உள்ளது. மேலும் பள்ளி வளாகம் என்பதால் மாணவர்கள் இருபுறமும் அடிக்கடி சென்று வரும் சூழல் உள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் நின்று செல்வதற்கு ஏதுவாக வேகத்தடை அமைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.