districts

img

கோவில் குடமுழுக்கு விழா: தண்ணீர்பந்தல் அமைத்த இஸ்லாமியர்கள்

புதுக்கோட்டை, மார்ச் 27-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு தண்ணீர்பந்தல் அமைத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இஸ்லாமியர்களை அனைத்துப் பகுதியினரும் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ளது 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆலங்குடி சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  கொளுத்தும் வெயியில் வந்த மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இது அப்பகுதியில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. இதை அப்பகுதியில் உள்ள அனைவரும் பாராட்டினர்.

;