புதுக்கோட்டை, மே 7- புறம்போக்கில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி திருமயம், அரிமளம் ஒன்றியக் குழுக்கள் சார்பில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, திருமயம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வீரையா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம், விதொச ஒன்றியச் செயலாளர் வீரமணி பங்கேற்றனர்.