districts

img

செட்டிகாட்டில் மாநில அளவிலான கபடி போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்ற காரைக்குடி அணி

அறந்தாங்கி, மார்ச் 20 -  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிரா மத்தில் ‘புதிய பறவை’ குழுவினரால் 25 ஆம்  ஆண்டு கபடி போட்டியின் இறுதிச் சுற்றை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநா தன் தொடங்கி வைத்தார். அறந்தாங்கி ஒன்றி யத்திற்குட்பட்ட தாந்தாணி ஊராட்சி செட்டிக்காடு கிரா மத்தில் பங்குனி உத்தி ரத் திருவிழாவை முன்னிட்டு புதிய பறவை குழுவின ரால் 25 ஆம் ஆண்டு மின்னொளி அரங்க மாநில கபடி போட்டி நடத்தப்பட்டது. மாநில அளவில் 32  அணிகள் பங்கு பெற்றன. இந்த ஆட்டத்தில் காரைக்குடி அணியி னர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதில்  முதல் பரிசாக ரூ.30,025 ரொக்கமும் கோப்பை யும் வழங்கப்பட்டது. 2 ஆவது பரிசாக சேலம் அணியினர் ரூ.20,025 ரொக்கமும் கோப்பை யும் பெற்றனர். 3 ஆவது பரிசாக அறந்தாங்கி அருகே  மூக்குடி அணியினர் ரூ.10,025 ரொக்கமும் கோப்பையை பெற்றனர். 4 ஆவது பரிசாக தூத்துக் குடி அணியினர் ரூ.10, 025 ரொக்கமும் கோப்பையை பெற்றனர். முன்னதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு குத்துச்சண்டை தலைவர் பொன்.பாஸ்க ரன் மற்றும் புதிய பறவை  குழுவினர், ஊர் பொது மக்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள், ரசிகர்கள், மின் னொளி கபடி போட்டியை கண்டு ரசித்தனர்.  ஒவ்வொரு போட்டிக்கு இடையிலும் குழந்தைகள், மாணவிகள் நடனமாடியும், சிலம்பம் சுற்றியும் ரசிகர்களை உற்சாகப்படுத் தினர்.