புதுக்கோட்டை, ஜன. 28- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி யின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமை வகித்தார். பள்ளியின் ஆண்டுமலரை (விங்ஸ்) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார். விஜய் குழுமத் தலைவர் முருகானந்தம், மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி யின் முதல்வர் தங்கம் மூர்த்தி வர வேற்றார். துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். விழாவில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, முதன்மைச் செயல் அலுவலர் காவியா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.