districts

விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையைத் தீர்மானிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச் 19-  விவசாயிகள் விளைவிக்கும் பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநட்டு முடிவுகளை விளக்கி புதுக்கோட்டையில் ஞாயிறன்று பேரவை நடைபெற்றது. மாவட்டத் தலை வர் எஸ்.பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்ற பேரவையில்  மாநாட்டு முடிவு களை விளக்கி மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு உரையாற்றினார். மாவட்டச் செயலாளர், ஏ.ராமையன், மாவட்டப் பொரு ளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, த.அன்பழ கன், எம்.வீரமணி, சி.பாண்டியன், எம்.நாரா யணமூர்த்தி, ஆர்.சி.ரெங்கசாமி உள் ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்றனர். பேரவையில், “விவசாயிகள் விளைக் கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார  விலையை ஒன்றிய, மாநில அரசுகள் தீர்மா னிக்க வேண்டும். காவிரி, வைகை, குண் டாறு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மோடி விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் புதுக் கோட்டை மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.