districts

img

சாலை அமைக்கும் பணி தொடக்கம்: போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை, மார்ச்.1- புதுக்கோட்டை மாவட் டம் சேந்தன்குடியில் அதி காரிகள் முன்னிலையில் சாலை அமைக்கும் பணி  தொடங்கியதால் முதல மைச்சருக்கு அடையாள அட்டைகளை அனுப்பும் போராட்டம் திரும்பப் பெறப்  பட்டது. ஆலங்குடி தாலுகா கீர மங்கலம், நகரம், சேந்த ரன்குடி கிராமங்களை மையப்  படுத்தி உள்ளது பெரியாத்  தாள் ஊரணி. இதற்கு கொத்  தமங்கலம் அன்னதானக் காவேரி ஆற்றிலிருந்து வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. இதனால் கால்வாயின் தெற்கு கரை யில் உள்ள வீடுகள், தோட் டங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை ஏற் பட்டது. இந்நிலையில், கருப்  பையா மகன் செல்வம் (40)  என்பவர் தனது வீட்டிற்கு செல்ல கால்வாய் கரையோ ரம் சாலை வசதி வேண்டும் என முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்ததுடன் குடும்பத்து டன் பல்வேறு காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தி னார்.  கடந்த ஒரு வருடமாக நட வடிக்கை இல்லாத நிலை யில் தனது குடும்பத்தில் உள்ள 6 ஆதார் அட்டை கள், 4 வாக்காளர் அடையாள அட்டைகள், 2 குடும்ப அட்  டைகளை முதலமைச்ச ருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் செவ்வாய்க் கிழமை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண் டார். வட்டாட்சியர் செந்தில்  நாயகி, வட்டார வளர்ச்சி  அலுவலர் கோகுலகிருஷ் ணன், பொதுப்பணித்துறை அதிகாரி கோவேந்தன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.  பின்னர், உடனடியாக சாலை அமைப்பதாக கோட்  டாட்சியர் உறுதி அளித்தது டன் பொக்லின் வாகனத்தை வரவைத்து சாலை அமைக் கும் பணியையும் தொடங்கி வைத்தார்.