districts

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் வி.தொ.ச ஒன்றிய மாநாடு கோரிக்கை

பொன்னமராவதி, நவ.9- அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஒன்றிய 5-வது மாநாடு அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலை வர் வி.ஆர்.எம் சாத்தையா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே. சண்முகம் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ரு தீன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.நல்ல தம்பி, கே.குமார், சி.பாண்டியன், எஸ்.பாஸ்கர், ஏ.எஸ்.செளந்தரம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.மதியரசி ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.  புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாநில பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரையாற்றினார். ஒன்றியத்தின் புதிய தலைவராக கட்டையாண்டிபட்டி கே.ஆர்.பழனியப்பன், செயலாளராக பி.ராமசாமி, பொருளாளராக டி.சிவசுப்பிரமணியன், துணைத் தலைவராக சின்னையா, துணைச் செயலாளர்களாக ஆறுமுகம், மகேஸ்வரி, லதா, மாயழகு, கற்பகம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. பொன்னமராவதி தாலுகாவில் வசதி  படைத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்  பட்டுள்ள நிலங்களை மீட்டு, நிலம் இல்லாத  ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து  ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், 600 ரூபாய் தினக் கூலியும் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். ஏழை மக்களுக்கு குடியிருக்க இடமும்  இலவச வீடும் கட்டித் தர வேண்டும். காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.