districts

img

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை நோயாளிகள், பொதுமக்கள் அச்சம்

அறந்தாங்கி, அக். 26 - புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குரங்குகள் தொல்லையால் நோயாளி களும், பொதுமக்களும் அச்ச மடைந்துள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உள்நோயாளி களாகவும், வெளி நோயாளி களாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இது தவிர நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  இந்த மருத்துவமனையை சுற்றிலும்  குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற் கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். நோயாளியை பார்ப்பதற்காக அவர்களது உறவினர்கள் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் பறித்துச் சென்றுவிடுகின்றன. இருசக்கர வாகனங்களில் வைக்கப்படும் உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று  விடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லும் போது, கூட்டமாக அங்குமிங்கும் ஓடுவ தால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். சில சமயங்களில் நோயா ளிகள் தங்கியுள்ள பகுதிக்கும் வந்து விடு வதால் நோயாளிகள் அச்சமடைகின்றனர்.  இதுதவிர மருத்துவமனைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகளின் கூட்டம் குறுக்கிடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். சில சமயங்களில் கனரக வாகனங்களில் அடி பட்டு குரங்குகள் இறந்து விடுகின்றன. எனவே அதிகாரிகள் இதில் உடனடி நடவ டிக்கை எடுத்து குரங்குகளை வனப்பகுதிக் குள் விட வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.