districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை, ஜூலை 15 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கலை, இலக்கியக் போட்டிகள் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றன. 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி ஒன்றியம் மற்றும் நக ராட்சி அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியப்  போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு மாவட்ட அளவில் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி யில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்: போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு ஸ்ரீபிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் சே.மணிவண்ணன் தொடங்கி வைத்து  உரையாற்றினார். அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பி னர் அ.மணவாளன், மாவட்டத் தலைவர் எம்.வீர முத்து மற்றும் நிர்வாகிகள் வாழ்த்திப்  பேசினர். நிகழ்ச்சிகளை மகா.சுந்தர் ஒருங்கி ணைத்தார். முன்னதாக கு.ம.திருப்பதி வர வேற்க, மு.கீதா நன்றி கூறினார்.

;