அறந்தாங்கி, நவ.21- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிப்பட்டி ணம் ஊராட்சி கொள்ளுத்திடல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் வயல்வெளிகளில் இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. மேலும் சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொள்ளுதிடல் கிராமத்திற் கான சுடுகாட்டு பாதையை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கரு.இராமநாதன் தலைமை யில் நவம்பர் 30-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது.