புதுக்கோட்டை, மார்ச் 20- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 403 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை கள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,500 மதிப்பீட்டில் பிரெய்லி வாட்ச், கருப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் ஆகிய வற்றை 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42,500 மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் 6 மாதத்திற்கு உட்பட்ட ஊட்டசத்து குறைபாடுடைய 1,163 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விதமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் 2021-22 ஆம் ஆண் டிற்கான மாவட்ட அளவிலான 9 மகளிர் சுய உத விக்குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணி மேகலை விருது, ரூ.4 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டு கேடயங்களையும் ஆட்சியர் வழங்கினார்.