தலைஞாயிறு பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினராக சிபிஎம் சார்பில் ஏ.சுபாஷினி போட்டியிடுகிறார்.
***
கும்பகோணம் மாநகராட்சி 34 வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆ.செல்வம், கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், திமுக பிரேம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
***
திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை பேரூராட்சி 6வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.சத்யா பாண்டியன் வியாழனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
***
திருச்சி மாநகர் மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி 5 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீனா கிருஷ்ணமூர்த்தி வியாழனன்று மனு தாக்கல் செய்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
***