புதுக்கோட்டை, மார்ச்.1- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் புதுக்கோட்டை மண்டல 4-ஆம் ஆண்டுப் பேரவை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. மூத்த தோழர் எஸ்.பெரு மாள், உதவித் தலைவர் எஸ். ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன், மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ், அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா, மண்டல பொதுச் செயலாளர் எஸ். இளங்கோவன், பொருளா ளர் எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரவையில், அகவிலைப் படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண் டும். ஓய்வூதியர்களின் நிலு வைத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். அரசே ஓய்வூதியத் திட் டத்தை ஏற்று நடத்த வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.