districts

img

புத்தக திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

பொன்னமராவதி/அறந்தாங்கி, ஜூலை 13 - புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தக  திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக  கலை இலக்கியப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து  புத்தக திருவிழாவை நடத்த உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் விழிப்பு ணர்வு பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி வலம்புரி வடுக நாதன் மேல்நிலைப் பள்ளியில் கலை இலக்கி யப் போட்டி நடத்தப்பட்டது.  பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்ன மராவதி அமல அன்னைப்பள்ளி, வடுகநாதன்  மேல்நிலைப் பள்ளி, வேந்தன்பட்டி ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப் பட்டது.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட  குழந்தை நல அலுவலர் சதாசிவம், தமிழ்நாடு  அறிவியல் இயக்க முன்னாள் மாநில பொரு ளாளர் பிரபாகரன், வட்டார வளமைய மேற்பார் வையாளர் நல்லநாகு, தலைமையாசிரியர் தமிழ்செல்வன், மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் பரிசும், பங்கு பெற்ற  அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும் வழங்கினர். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றி யத் தலைவர் அறிவுடைநம்பி, செயலாளர் ராசு, பொருளாளர் பிரபு மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  மணமேல்குடி ஒன்றியத்தில் 6 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை பேச்சுப்போட்டி,  கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடை பெற்றது. இப்போட்டியினை மணமேல்குடி அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.  மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை  வகித்தார். மணமேல்குடி தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார். நடுவர்களாக ஆசிரியர்கள் துரைராஜ், இளையராஜா, திரு முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் செயல் பட்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மண மேல்குடி உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் நன்றி கூறினார்.