districts

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்குக! ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.4 - அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற பள்ளி,  கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சரவ ணன் தலைமை வகித்தார். இணைச் செய லாளர் கணேசன் வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் பா.கிருஷ்ணன், தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்‌ சங்கம் மாவட்டத் தலைவர் மு.முத்தையா, மேனாள் மாவட்டக் கல்வி‌ அலுவலர் (ஓய்வு) இராஜேந்திரன்,‌ ‌கு.ம.திருப்பதி தமிழா சிரியர் (ஓய்வு), சீனி.இராமச்சந்திரன் ‌உதவி  தொடக்கக்கல்வி அலுவலர் (ஓய்வு), காந்தி நாதன் த.ஆ (ஓய்வு), தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மேனாள் மாவட்டத்  தலைவர் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டப்  பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறி னார்.  கேரளா, ஆந்திரா அரசுகளைப் போல அறுவை சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்குமான செலவு தொகையை மீளப் பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அக விலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். குடும்ப நல  நிதியை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுத லாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந் தோறும் மருத்துவப் படியை ரூபாய் ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய  ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;