districts

img

அக்.2 புதுக்கோட்டையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை, செப்.27 - காந்தியின் பிறந்தநாளை முன் னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி இடதுசாரி,  விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி 9 மையங் களில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை  முன்னிட்டு இடதுசாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் அக்.2 அன்று தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என அக்கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. இந்த  இயக்கத்தை நடத்துவது தொடர்பான  ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க் கிழமை புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் செப.பாவாணன், சசி.பா.கலைவேந்தன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை புதுக் கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீர னூர், அன்னவாசல், மணமேல்குடி, பொன் னமராவதி ஆகிய 9 மையங்களில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த மனித சங்கிலி இயக் கத்தில் மேற்படி கட்சி அணிகள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் அமைப்பு கள், பொதுமக்கள் என மாவட்டம் முழு வதும் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டுவது எனவும், இதுகுறித்து மாவட் டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

;