districts

img

வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு 492 காளைகள் பங்கேற்பு; 21 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.18-  புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அருகே  வடமலாப்பூரில் கருப்பர் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  போட்டியை சுற்றுச்சூழல்துறை அமைச்  சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, கோட்டாட்சியர் முருகேசன், திமுக வடக்கு  மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து வந்த 492 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 207 மாடுபிடி வீரர்கள் களமி றக்கப்பட்டனர். இதில், வீரர்கள் 21 பேர் காயமடைந்தனர். அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவக் குழு வினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 5 பேர்  108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.