districts

img

சினிமாவில் புதிய உத்திகளைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் இயக்குநர் பாண்டிராஜ் கருத்து

புதுக்கோட்டை, அக்.17 - பழைய பார்முலா படி,  இனி படங்களை எடுக்க  முடியாது. புதிய உத்திகளை  ரசிகர்கள் எதிர்பார்க்கின்ற னர் என்றார் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ். புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்- கலைஞர்கள் சங்கத் தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கலந்து  கொண்டு அவர் பேசியதாவது: “பொதுவாகவே திரைப் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருந் தால்தான் மக்கள் பார்ப்பார் கள் என திரைத்துறையினர் தான் தவறாக நினைத்தி ருக்கிறோம். குறிப்பாக, கொரோனா காலத்துக்குப் பிறகு, திரைப்பட ரசிகர்களின்  மனநிலை நிறைய மாறி யிருக்கிறது. இணையதளத் தில் நிறைய வெளிநாட்டுப் படங்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெவ்வேறு அனுபவங் களுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே, திரும்பத்  திரும்ப ஒரே வட்டத்துக்குள் கதையை ஓட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண் டிருக்கிறோம். வழக்க மான பார்முலாவை வைத்துக்கொண்டு, இனி சினிமா எடுக்க முடி யாது. புதிய புதிய யுக்தி களைத் தேட வேண்டும். மக்களுக்குத் தர வேண்டும். புதுமுகங்கள், சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரை யரங்குகளை ஒதுக்க வேண்டும் என்பது பற்றி தயாரிப்பாளர்கள் பேசுவர். பின்னர் அந்த கோரிக்கை அப்படியே விடப்படும். தமு எகச போன்ற அமைப்பு கள் சிறிய பட்ஜெட் படங் களுக்கு, திரையரங்குகளை உருவாக்க வேண்டும். பல படங்களுக்கு தேர்வாகாமல் போனவர்களைக் கொண்டு தான் சுசீந்திரன் வெண்ணிலா  கபடிக்குழு படத்தை எடுத்தார். அது நல்ல வெற்றியைத் தந்தது.  அனைத்துத் தரப்பினரை யும் ஈர்க்கும் வகையில் படங் களின் தலைப்பும், போஸ் டர்களும் வடிவமைக்கப்பட வேண்டும்” இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.