புதுக்கோட்டை, மார்ச் 29- காது கேளாதோர்களுக் கான தேசிய அளவிலான தட களப் போட்டியில் முதல் பரிசு வென்ற சச்சின்பிரியதர் சனை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் அழைத் துப் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட் டம் பலான்நகர் சேதுராமன் வீதியைச் சேர்ந்த நாராய ணன், பரிமளாராயி தம்பதிய ரின் மகன் என்.சச்சின்பிரிய தர்சன். சென்னை அடை யாறு லூயி காது-கேளா தோர் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசத் தில் நடைபெற்ற காதுகேளா தோர்க்கான தேசிய அளவி லான தடகள போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு வென்றுள்ளார். இவர் தான் வென்ற சான்றிதழ் மற்றும் பதக்கத் தினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் புதன்கிழமை காண்பித்து வாழ்த்து பெற் றார். நிகழ்வில், மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலு வலர் எஸ்.உலகநாதன் மற் றும் பலர் கலந்துகொண்ட னர்.