districts

img

மங்களாபுரம் ஜல்லிக்கட்டு:  33 பேர் காயம்

புதுக்கோட்டை, மார்ச் 6- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்களா புரத்தில் கருப்பர், முனீஸ்வரர் கோயில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்  சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட  மாவட்டங்களைச் சேர்ந்த 539 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த  காளைகளை அடக்க 230 மாடுபிடி வீரர்கள் களமிறக் கப்பட்டனர்.  ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 33 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த  மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளை களை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின்  உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.  போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பார்வையிட்ட னர். காவல்துணைக் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி  தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.