அறந்தாங்கி, மார்ச் 10- புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ரேணுகா தேவி வரவேற்றார். வழக்கறிஞர் பாண்டிச் செல்வி பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சட்ட விழிப்புணர்வு முகாமின் முக்கி யத்துவத்து பேசினார். விழாவில் சார்பு நீதிபதி செல்வி.கவிதா, அறந்தாங்கி வட்ட சட்ட பணிகள் குழுவின் முது நிலை நிர்வாக உதவியாளர் மணிமேகலை உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.