districts

img

ஒரு வருடமாக மூடிக்கிடக்கும் பொது சுகாதார வளாகம் திறக்க சிபிஎம் கோரிக்கை

புதுக்கோட்டை, மார்ச் 20-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்நிலைப்பட்டி கிளைக்கூட்டம் கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா, ஒன்றியக்குழு உறுப்பினர் அடைக்கப்பன் ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மேல்நிலைப்பட்டியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஒருவருடத்திற்கும் மேலாகியும் சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படவில்லை. எனவே, பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;