புதுக்கோட்டை, ஏப்.2- புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பிரிவினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசி யது: ஆலங்குடி அரசு பொது மருத்துவமனையில் ரூ.89 லட்சம் மதிப்பிலான உயர்தர உயிர்காக்கும் கருவிகளு டன், ரூ.11 லட்சம் மதிப்பீட்டி லான கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மக்களின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இப்பிரிவில் மார டைப்பு, மூச்சுத் திணறல், அறுவை சிகிச்சைக்குச் பின் கவனிப்பு, மகப்பேறுக்குப் பின் கவனிப்பு, கைகால் பல வீனம், மூளை ரத்தக் கசிவு, விபத்து உள்ளிட்ட நோய் களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரத்தப் பரி சோதனை கருவி, மூச்சு சுவா சக் கருவி, உடல் வெப் பத்தை சம நிலையில் வைக் கும் கருவி, மாரடைப்பு சரி செய்யும் கருவி, பிராண வாயு செலுத்தும் கருவி, தானியங்கி கருவி மூலம் படுக்கையை சரி செய்யும் வசதி, செவிலியர்களுக்கு அவசரகால செய்தி அனுப் பும் கருவி, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மை வகித்தார். ஒன்றிய குழுத் தலைவர் வள்ளி யம்மை தங்கமணி, பேரூ ராட்சி மன்றத் தலைவர் ராசி. முருகானந்தம், இணை இயக்குநர் (மருத்துவப்பணி கள்) (பொ) ராதிகா, தலை மை மருத்துவ அலுவலர் பெரியசாமி, வட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிடோர் பங்கேற்றனர்.