districts

img

தட்டான்வயல் கிராமத்தில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

அறந்தாங்கி, மார்ச் 7- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே உள்ள தட்டான் வயல் கிரா மத்தில் மாசிமக திருவிழா வை முன்னிட்டு கிராமத்தி னர்- இளைஞர்கள் இணைந்து மாட்டு வண்டி எல்கை பந்த யம் நடத்தினர். மதுரை, தஞ்  சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து 53-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்றன.  பந்தயம் பெரிய மாடு, சின்ன மாடு என  இரு பிரிவுகளாக  நடத்தப்பட்டது. சீறிப்பாய்ந்து  சென்ற இரட்டை மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாருக்கு ரொக்கப் பணம், குத்து ‘விளக்கு, வழங்கப்பட்டது.