districts

கல்வி வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் குழு அமைக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, டிச.21- கல்வி வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள் புகார் குழு அமைக்க வேண்டுமென இந்  திய மாணவர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்  டத் தலைவர் அ.சந்தோஷ் குமார், செயலாளர் சா. ஜனார்த்தனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அரசு கல்லூரி ஒன்றில் கௌரவ விரிவுரையாளராக பணி யாற்றும் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 18 வயதுக்கு உட்பட்ட மாண வியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடியோ வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. அம்மாணவியின் தாய் இறந்துவிட்டார். தந்தை உடன் இல்லாத சூழலில், அம்மாணவி காப்பாளருடன் வசித்து வருகிறார். காப்பாளர் இப்பிரச்ச னையை அலட்சியப்படுத்தி யதால், செய்வதறியாது தவித்த மாணவிக்காக இந்  திய மாணவர் சங்கத்தின்  சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தங்களது  பாதுகாப்பில் வைத்திருந் தது. பின்னர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இருந்து வந்த விசாரணைக்குழு மாணவியை காப்பாளரின் வீட்டில் 15 நாட்கள் இருக்க வலியுறுத்தியது. இதனை  மாணவி ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, மாணவியை காப் பகத்தில் ஒப்படைக்கிறோம் என அழைத்துச் சென்றனர். ஆனால், உறுதியளித்த தற்கு மாறாக மாணவி காப்  பாளரிடமே ஒப்படைக்கப்பட் டுள்ளார்.

இதனால், காப் பாளர் தரப்பும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளரின் தரப்பும் சேர்ந்து மாணவியை மிரட்டி சித்ரவதைக்கு உள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப் பேற்க வேண்டும். இந்நிலையில், இந்திய  மாணவர் சங்கத்தின் மீது சிலர் அவதூறுகளைப் பரப்பி  வருகின்றனர். கல்வி வளா கங்களில் பாலியல் குற்றங் களை தடுத்திடவும், பாலின சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து போராடி வரும் இந்திய மாணவர் சங்கத்தின் மீது தவறான தகவல்களை பரப்பும் பாலியல் குற்றவாளி களின் ஆதரவாளர்களை யும், அதற்கு துணைபோகும் அதிகாரிகளையும் இந்திய  மாணவர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது.  கல்வி நிலையங்களில் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத் தலை தயக்கமின்றி தெரி யப்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும். இதற்காக, அனைத்து கல்வி வளாகங்க ளிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு எதிராக சட்டப்படி உள்புகார் குழுக்  களை அமைத்து, கல்வி நிலைய பாலியல் துன்புறுத் தலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.