புதுக்கோட்டை, ஜூன் 20 - அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவ சாயிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகியுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்றா கும். அதிலும் கடும் வெப்பம் தகிக்கும் இக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது சாதாரண மக்களை சித்ரவதைக்கு உள்ளாக் குகிறது. வசதி படைத்தவர்கள் இன்வெட்டர் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடி யும். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தினர், சிறுகடை வியாபாரிகள், சிறிய அளவிலான உணவகங்களை வைத்திருப்போர் மின் தட்டுப்பாட்டால், அவர்களின் அன்றாட பிழைப்பே கேள்விக்குறியாகி வருகிறது. அதுபோல, விவசாயிகள் படும் வேத னையும் சொல்லிமாளாது. ஏற்கனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்தி லும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரண மாக விவசாயம் முற்றிலுமாக அழிந்துவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளுகின்ற திமுக அரசுக்கு ஏற்கனவே மின்வெட்டு குறித்த குற்றச்சாட்டு உள்ளது. தற்பொழுது உள்ள சூழலுக்கு ஒன்றிய அரசின் மின்சார சட்டமும், எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களை வஞ்சிக்கும் போக்கும் இருப்பது உண்மைதான். ஆனால், அதையே காரணம் காட்டி மக்களை துய ரத்தில் ஆழ்த்துவது நியாயமில்லை. பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தடை யின்றி மின்சாரம் கிடைக்க தமிழக அரசும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.