districts

உயர் அதிகாரிகளின் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை, ஏப்.11- அரசு வேலை வாங்கித் தரு வதாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கை யெழுத்தை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக் காத காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் தலை மையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார் (35). இவர் தமிழ்நாடு முழுவதும் போலி பணி  ஆணைகளை வழங்கி, பண வசூல்  வேட்டை நடத்தியுள்ளார். புதுக்  கோட்டை மாவட்டத்தில் வறுமை யில் வாடும் இளைஞர்கள், இளம் பெண்களிடமும் மேற்படி நபர்  இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள் ளார். அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ்,  அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி  ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகிலாண்டேஸ்  வரி ஐஏஎஸ் என பலரது கையெ ழுத்துகளுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கி, மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகி யோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு  அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மேற்படி மோசடி நபர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் பாதிக்கப்பட்ட மக்களையே காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்தி உள்ளனர். காவல்துறையின் இத்தகைய தவறான நடவடிக்கைக்கு கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கடும் கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. தமிழக அர சும், மாவட்ட நிர்வாகமும் உட னடியாக இதில் தலையிட்டு மேற்  படி குற்றவாளியை கைது செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மோசடி பேர்வழி ஜெரால்டின் சொத்துகளை முடக்க வேண்டும். அப்பாவி மக்கள் இழந்த தொகை யை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கட்டுப் படுத்துவதற்கு தனியாக புல னாய்வுக் குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

;