districts

img

தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆறுதல்

புதுக்கோட்டை, ஆக.2 - தேர் விபத்தில் காயமடைந்தவர்களை செவ்வாய்க்கிழமை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னார். புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோ கர்ணத்தில் 31.7.2022 அன்று நடைபெற்ற தேர்  திருவிழாவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த  தேர் விபத்தில் காயமடைந்து, புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருபவர்களை, சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், அரசு மருத்து வக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, புதுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

;