districts

பெண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, நவ.27 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தைலமரக்  காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை சாலை  மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தெற்கு பல்லவராயன்பட்டியைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது  மனைவி பழனியம்மாள் (35). இவர்களுக்கு 10 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் 4 பெண் குழந்தை கள் உள்ளனர். திருச்செல்வம் கடந்த ஒன்றரை ஆண்டு களாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், பழனியம்மாளை கடந்த நவ.23 ஆம்  தேதியிலிருந்து காணவில்லை என அவரது தந்தை தங்க வேலு, நவ.25 ஆம் தேதி கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தொம்பரம்பட்டி தைல  மரக்காட்டில் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில்  கிடப்ப தாக, கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவ லறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு  விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபர் பழனியம்மாள் என்பது தெரிய வந்தது. இதையறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், பழனியம்மாளின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரை  கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரியும் புதுப்பட்டி யில் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி ஆகியோர் பழனி யம்மாளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், பழனியம்மாளின் இறப்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.