districts

img

செம்பனார்கோயிலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, ஜூலை 21- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திர குமார் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் வெங்கடேசன், மருத்துவ மேற்பார்வையாளர் குண சேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் கலந்து கொண்டு பேசினார்.  ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்து கொண்டு  விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். செம்பனார்கோயிலில் தொடங்கிய பேரணியில் கலைமகள் நர்சிங் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், டெங்கு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியப்படி காளகஸ்திநாதபுரத்தில் உள்ள கலை மகள் நர்சிங் கல்லூரிக்கு சென்றனர்.  இதில் மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வா ளர்கள், டெங்கு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தனி யார் பள்ளியின் நிர்வாக இயக்குநர் குடியரசு நன்றி கூறினார்.