districts

குடியிருக்கும் வீட்டை இடித்து அராஜகத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.28 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நம்பன்பட்டியில் குடியிருக்கும் வீட்டை இடித்த வருவாய்த்துறையினரைக் கண்டித்து கறம்பக்குடி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகா மாங்கோட்டை ஊராட் சிக்கு உட்பட்ட நம்பன்பட்டியில் வசித்து வரு பவர் விஜய் மனைவி இந்து. இவர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை இடித்து கல்லுக்கால்களை உடைத்து காவல் துறையினரின் உதவியோடு அராஜ கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சமூக  விரோதி கொடுத்த புகாரின் அடிப்படை யில் இத்தகைய சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது. மேற்படி சம்பவத்தைக் கண்டித்து கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;