புதுக்கோட்டை, ஏப்.2- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகர் 19-ஆவது வார்டு டேவிதார் இரண்டாவது குறுக்குத் தெரு பாதை ஆக்கிரமிப்பு களை அகற்றி சாலை வசதி செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கல்லுப்பட்டறை கிளை சார்பாக கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளைச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாவட்டக்குமு உறுப்பினர் தங்கராஜ், வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் அலாவுதீன், சிஜடியு ஒருங்கினைப்பாளர் கர்ணா, வாலிபர்சங்க ஒன்றி யச் செயலாளர் பாண்டி கெளதம், பொருளாளர் சங் கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். டேவிதார் சாலை ஆக்கி ரப்பை அகற்ற வேண்டும். குடிநீர்வசதி, தெருவிளக்கு, குப்பைத்தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும் மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் செல்வ தைத் தடுக்க வேண்டும் என கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.