புதுக்கோட்டை, அக்.20:- கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளின் அவசியத் தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்களில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோச னைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் தங்கள் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் தொ டர்புடைய அலுவலர்கள் விரைந்து முடித்து பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.