districts

img

வன உயிரின வார விழா போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, நவ.30-  வனத்துறையின் சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு புதனன்று நேரில் அழைத்து பாராட்டினார்.  தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் 2022-ஆம் ஆண்டிற்  கான வன உயிரின வார விழா போட்டிகள், பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இடையே நடத்தப்  பட்டது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புதனன்று புதுக்  கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.  நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.