புதுக்கோட்டை, அக்.29 - சிஐடியு 15 ஆவது மாநில மாநாட்டை யொட்டி திருச்சியிலிருந்து புறப்பட்ட தோழர் ஆர்.உமாநாத், பொன்மலை தியாகி கள் நினைவு ஜோதி பயணத்திற்கு சனிக் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநில மாநாடு நவம்பர் 4,5,6 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி திருச்சியிலிருந்து தோழர் உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவாக ஜோதி பயணம் நடைபெற்று வருகிறது. சிஐடியு மாநிலச் செயலாளர் ரெங்க ராஜன் தலைமையில் இந்த ஜோதி பயணம் சனிக்கிழமை புதுக்கோட்டை வந்தடைந்தது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சின்னப்பா பூங்கா, மேட்டுப்பட்டி, திருவரங்குளம், ஆலங்குடி, வெட்டன்விடுதி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, குன்றாண்டார்கோவில், கீரனூர் வழியாக தொண்டைமான் நல்லூரில் நிறைவடைந்தது. இந்த பயணக் குழுவில் சிஐடியு புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.