districts

img

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை, டிச.16 -  புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமை யில் நடைபெற்ற வளைக்காப்பு விழாவில், மருத்துவக் குழுவினர் மூலமாக அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கண் காட்சியில் கர்ப்பகால பராமரிப்பு, இணை உணவுப் பொருட்கள், சிற்றுண்டி, காய்கனி  அலங்காரம் உள்ளிட்டவை மூலம் கர்ப்பிணி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகே சன், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை  தங்கமணி, பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.