அறந்தாங்கி, மார்ச் 23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டு கோட்டை சாலையில் புதுக்கோட்டை மாவட்ட அனை த்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) டாடா ஏஸ் ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கிளை துவக்க விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் வி.பழனிகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.முருகதாஸ், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் க.ரெத்தினவேல் சிஐடியு கொடியை ஏற்றினார். கிளைச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், பொரு ளாளர் பி.மணிகண்டன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், மாவட்டக் குழு தங்கராஜ், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா உள்பட டாடா ஏஸ் ஒட்டுநர்கள், உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.