பொன்னமராவதி, மே 4- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள், பெற்றோர்களுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் மெகா விழிப்புணர்வு நடத்தப் பட்டது. குழந்தைகள் நல குழு தலைவர் சதாசிவம் மற்றும் சைல்டு லைன் திட்ட இயக்குநர் குழந்தைவேல் தலைமை யில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்தியபாமா, பொன்னமராவதி காவல் நிலைய தலைமைக் காவலர்கள் விமலாம்பாள், சித்ரா ஆகியோர் குழந்தைகளுக்கான சுயபாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல், சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.