districts

img

காவிரி, வைகை, குண்டாறு திட்டம் ரூ.6950 கோடியில் தொடக்கம்

புதுக்கோட்டை, ஏப்.1-  காவிரி, வைகை, குண்  டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டமாக மாயனூரிலி ருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் வெட்ட மொத்தம் ரூ.6950 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.  கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு திட்டம் குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு இத்திட்டத் தின் சிறப்பு மாவட்ட வரு வாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி அளித்த பதில் வரு மாறு: காவிரி, வைகை, குண் டாறு இணைப்புத் திட்டத்தில் முதல்கட்டமாக மாயனூரிலி ருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் வெட்ட மொத் தம் ரூ.6,950 கோடியில் திட் டம் தொடங்கப்பட்டது.  இதில் நிகழாண்டில் (2023-24) திருச்சி, புதுக்  கோட்டை, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நிலம் எடுப்புக்காக ரூ.554 கோடியும், கால்வாய் வெட்  டும் பணிகளுக்காக ரூ.112 கோடியும் ஒதுக்கீடு செய்யப்  பட்டுள்ளது. இதில் நிலம்  எடுப்புக்கு புதுக்கோட் டைக்கு மட்டும் ரூ.200 கோடி வரை நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அந்தந்தப் பகுதி அலுவலங்களிலேயே நிலத்தை மதிப்பிட்டு ஒப்பு தல் தரும் பணிகள் நடை பெற்று வருகின்றன. எந்த வகையிலும் தேக்கம் இல்லை என்றார். விவசாயிகள் குறை கேட்பு நாளில் கொடுக்கப் படும் மனுக்களுக்கு எழுத்  துப்பூர்வமாக பதில் அளிக்  கப்படுவதில்லை என்ற விவ சாயிகளின் கேள்விக்கு முறையான பதிலை விவ சாயிகளுக்கு வழங்குவ தற்கு வேளாண் இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறி வுறுத்தினார். ரூ.149 கோடியில் சாலைகள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ‘‘மாவட் டத்தில் நிகழாண்டுக்கு 400  கிராமச் சாலைகளை ரூ.149  கோடியில் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ள தாகவும், ஏப்ரல் இறுதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரி பணிகள் தொடங்கப்படும்’’ என்றார். மாவட்ட வன அலுவலர் பிரபா பேசுகையில், ‘‘தைல மரங்களை அகற்றுவது குறித்து விவசாயிகளின் கோரிக்கை வனத் தோட்டக் கழக மேலாண்மை இயக்கு நருக்கும், ஆட்சியர் வழியாக  அரசுக்கும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட மாக நீதிமன்ற உத்தரவு களை முறையாகப் பின்பற்று வது குறித்து, வனத்தோட்டக் கழகத்தின் மண்டல மேலா ளர்களுடன் தனியே சிறப்புக்  கூட்டம் நடத்த மாவட்ட நிர்வா கம் வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.