districts

img

‘புத்தகங்கள் அறிவைப் பெறுவதற்கான கருவி’ எழுத்தாளர் பெருமாள் முருகன் உரை

புதுக்கோட்டை,  அக். 3 - பொது வெளிகளில் நிகழ்ச்சிகளை நடத்துவ தற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துவரும் இவ்வே ளையில், எளிய வடிவிலான இலக்கியக் கூட்டங்களை நிறைய நடத்த வேண்டும் என்றார் எழுத்தாளர் பெரு மாள் முருகன்.  புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் அமைப் பின் 100 ஆவது கூட்டத்தில் அவர் பேசியதாவது: இப்போது இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரங்கு களில் அனுமதி கிடைப்ப தில்லை. அரசியல் பேசு கிறார்கள் என்பன உள்ளிட்ட சாக்குப் போக்குகளைச் சொல்லி அனுமதி மறுக்கப் படுகின்றன. ஜனநாயக  முறைப்படி கோரிக்கை களை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டங்களைக்கூட பொதுமக்கள் நடமாட்ட மில்லாத பகுதியில் நடத்தச் சொல்கின்றனர்.  எனவே, நமக்கான பொதுவெளிகளை உரு வாக்க வேண்டியது அவசி யம். நிறைய செலவு செய்யும்  கூட்டங்களைத் தவிர்த்து, எளிய கூட்டங்களை நிறைய நடத்த வேண்டும். போராட்ட வடிவங்களிலும்கூட மனித  சங்கிலி போன்ற வடிவம்  எளிதாக, போக்குவரத்து நெரிசல் இல்லாத அதே நேரத்தில் பொதுமக்களிடம் கவனம் பெறும் வடிவம். இதுபோன்ற மாற்று வடி வங்களை கண்டறிய வேண்டும். பெரும்பாலானோர் புத்தகம் வாங்குவதற்கு என தனியே செலவிடுவதில்லை.

புத்தகங்கள் அறிவைத் தரக் கூடியவை, அவை சொத்து என்ற பார்வை நம்மிடம் இல்லை. வீடுகளின் அமைப் பில் வரவேற்பறை, படுக்கை யறை, பூஜையறை இருக்கும். ஆனால், பல வீடுகளில் படிப்பு அறை, வாசிப்பு அறை இருப்பதே இல்லை. குழந்தைகள் படிப்பதற்குகூட தனி அறை உருவாக்கித் தருவதில்லை. வெளிநாடுகளில் அப்படி யொரு தனி அறை உண்டு. புத்தகங்கள் அறிவைப் பெறுவதற்கான கருவி என்பதை நாம் இன்னமும் உணரவில்லை. வேலையில்லாத நேரத் தில், தூக்கம் வருவதற்காக புத்தகங்களைப் புரட்டு வதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம். எனவே, வாசிப்பதற்கென்று தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் வேலை களில் ஒன்றாக புத்தக வாசிப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். வீதி 100 கூட்டங்கள் பற்றிய சிறப்பு மலரை மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு வெளியிட, புதுக் கோட்டை மாவட்ட பத்திரி கையாளர் சங்க தலைவர் சு.மதியழகன், செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  தமுஎகச மாநில துணைத்  தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரை நிகழ்த்தி னார். பிற்பகல் அரங்கில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பு ரையாற்றினார். பள்ளி கல்வி அமைச்சரின் நேர்முக  உதவியாளர் நா.அருள்முரு கன், கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மகா சுந்தர் வரவேற்றார். கஸ்தூரி  ரெங்கன் நன்றி கூறினார்.